பதிவு செய்த நாள்
15 ஜூன்2013
12:18
திருப்பூர்: டாலர் மதிப்பு உயர்வால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை தெரிந்து "பையர்'கள், ஆடைகளுக்கான மொத்த விலையை குறைத்து வழங்குகின்றனர். இதனால், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தி செலவுக்கேற்ப, வெளிநாட்டு "பையர்' கள், ஆடைகளின் விலையை நிர்ணயித்து, ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்கின்றனர். ஆடைக்கான தொகையை, டாலர், யூரோவாக வங்கிகளில் செலுத்துகின்றனர். இவை, இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு, ஏற்றுமதியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில், டாலர் மதிப்பு குறையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் தொகை குறையும்; டாலர் மதிப்பு உயரும்போது, உபரி லாபம் கிடைக்கும்.
கடந்த மாதம் வரை 54 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு, 59 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், உபரி லாபம் கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதை தெரிந்து கொண்ட "பையர்'கள், தற்போது, ஆடைகளுக்கான மொத்த விலையில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கேட்கின்றனர். மேலும், ஏற்றுமதி செய்யும் ஆடைகளை பெற்று வங்கிகளில் குறைந்தளவு டாலரை செலுத்துகின்றனர். இதனால், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு உபரி லாபம் பாதிக்கப்படுகிறது.
ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: "பையர்'களை நம்பியே ஆர்டர் பெறுவதால், வேறு வழியின்றி, விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், உபரி லாபம் கைநழுவிப்போகிறது. டாலர் மதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும்; ரூபாய் மதிப்பு சற்று உயரும். இதனால், தற்போதுள்ள டாலர் மதிப்பை கணக்கிட்டு, புதிய ஆர்டர் பெற முடியாத நிலை ஏற்படுகிறது, என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|