தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!!தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு!! ... டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன் டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன் ...
டாலர் மதிப்பு உயர்வு; "பையர்'கள் புதிய நெருக்கடி: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
12:18

திருப்பூர்: டாலர் மதிப்பு உயர்வால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தை தெரிந்து "பையர்'கள், ஆடைகளுக்கான மொத்த விலையை குறைத்து வழங்குகின்றனர். இதனால், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தி செலவுக்கேற்ப, வெளிநாட்டு "பையர்' கள், ஆடைகளின் விலையை நிர்ணயித்து, ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்கின்றனர். ஆடைக்கான தொகையை, டாலர், யூரோவாக வங்கிகளில் செலுத்துகின்றனர். இவை, இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு, ஏற்றுமதியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில், டாலர் மதிப்பு குறையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் தொகை குறையும்; டாலர் மதிப்பு உயரும்போது, உபரி லாபம் கிடைக்கும்.

கடந்த மாதம் வரை 54 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு, 59 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், உபரி லாபம் கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதை தெரிந்து கொண்ட "பையர்'கள், தற்போது, ஆடைகளுக்கான மொத்த விலையில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கேட்கின்றனர். மேலும், ஏற்றுமதி செய்யும் ஆடைகளை பெற்று வங்கிகளில் குறைந்தளவு டாலரை செலுத்துகின்றனர். இதனால், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு உபரி லாபம் பாதிக்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: "பையர்'களை நம்பியே ஆர்டர் பெறுவதால், வேறு வழியின்றி, விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், உபரி லாபம் கைநழுவிப்போகிறது. டாலர் மதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும்; ரூபாய் மதிப்பு சற்று உயரும். இதனால், தற்போதுள்ள டாலர் மதிப்பை கணக்கிட்டு, புதிய ஆர்டர் பெற முடியாத நிலை ஏற்படுகிறது, என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)