பதிவு செய்த நாள்
15 ஜூன்2013
14:11
புதுடில்லி: "தூர்தர்ஷனை முற்றிலும், டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; இதனால், ஸ்பெக்ட்ரம் தேவையற்றதாகி விடும்; இதை, வர்த்தக ரீதியாக விற்பனை செசவதன் மூலம், அரசுக்கு வருவாச கிடைக்கும்' என, பிரசார் பாரதிக்கான வல்லுனர் கமிட்டி சிபாரிசு செசதுள்ளது.
செயற்கைகோள் மூலமான, "டிவி' ஒளிபரப்பு வசதி முன்பு, அரசு கட்டுப்பாட்டில் இருந்த தூர்தர்ஷனுக்கு மட்டுமே இருந்தது. இதன்பின், தனியார், இந்தியாவில் இருந்தபடி, செயற்கைகோள் வழியாக ஒளிபரப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல மாற்றங்கள் வந்தன. தனியார் சேனல்களில் எண்ணிக்கை பெருகின. இதனால், ஒரு காலத்தில், ஏக போகத்தில் இருந்த தூர்தர்ஷன், இப்போது, ஓரம் கட்டப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை, பழையபடி புத்துயிர் ஊட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தூர்தர்ஷனை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பு, வல்லுனர் கமிட்டி ஒன்றை அமைத்தது. தூர்தர்ஷனை புத்துயிர் ஊட்டுவதற்கான வாசப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சாம் பிட்ரோடா தலைமையில், வல்லுனர் கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய, சாம் பிட்ரோடா கூறியதாவது: இக்கூட்டத்தில், தொழில்நுட்பம், தன்னாட்சி அதிகாரம், நிதி, மனித வளம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரசார் பாரதி தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆராய, 11 துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏழு கமிட்டிகள், தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்துவிட்டன. மீதமுள்ள நான்கு கமிட்டிகள், இரண்டொரு நாளில், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன. ஒவ்வொரு கமிட்டியும், தலா, 10 முதல் 12 பரிந்துரைகளை அளித்துள்ளன. இவற்றை தொகுத்து, முக்கியமான, 15 பரிந்துரைகளை பட்டியலிடுவதற்காக, மற்றொரு துணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, "அனலாக்' முறையில் உள்ள, தூர்தர்ஷன் ஒளிபரப்பை, முற்றிலும் டிஜிட்டல்மயத்திற்கு மாற்றுவது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாகும்போது, தற்போது பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம், தேவையற்றதாகி விடும். இதை மற்றவர்களின் பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக விற்பதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஏழு கமிட்டிகள் அளித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில், வல்லுனர் கமிட்டி மீண்டும் கூடி, முதலாவது வரைவு அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம். அடுத்த மாதத்திற்குள் இறுதி அறிக்கை தயாராகிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|