டாலர் மதிப்பு உயர்வு; "பையர்'கள் புதிய நெருக்கடி: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலைடாலர் மதிப்பு உயர்வு; "பையர்'கள் புதிய நெருக்கடி: திருப்பூர் பின்னலாடை ... ... வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.20 லட்சம் கோடி:கொத்தவரை பங்களிப்பு ரூ.21,287 கோடி வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.20 லட்சம் கோடி:கொத்தவரை பங்களிப்பு ரூ.21,287 கோடி ...
டிஜிட்டல் மயமாகிறது தூர்தர்ஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
14:11

புதுடில்லி: "தூர்தர்ஷனை முற்றிலும், டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; இதனால், ஸ்பெக்ட்ரம் தேவையற்றதாகி விடும்; இதை, வர்த்தக ரீதியாக விற்பனை செசவதன் மூலம், அரசுக்கு வருவாச கிடைக்கும்' என, பிரசார் பாரதிக்கான வல்லுனர் கமிட்டி சிபாரிசு செசதுள்ளது.

செயற்கைகோள் மூலமான, "டிவி' ஒளிபரப்பு வசதி முன்பு, அரசு கட்டுப்பாட்டில் இருந்த தூர்தர்ஷனுக்கு மட்டுமே இருந்தது. இதன்பின், தனியார், இந்தியாவில் இருந்தபடி, செயற்கைகோள் வழியாக ஒளிபரப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல மாற்றங்கள் வந்தன. தனியார் சேனல்களில் எண்ணிக்கை பெருகின. இதனால், ஒரு காலத்தில், ஏக போகத்தில் இருந்த தூர்தர்ஷன், இப்போது, ஓரம் கட்டப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை, பழையபடி புத்துயிர் ஊட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தூர்தர்ஷனை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பு, வல்லுனர் கமிட்டி ஒன்றை அமைத்தது. தூர்தர்ஷனை புத்துயிர் ஊட்டுவதற்கான வாசப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சாம் பிட்ரோடா தலைமையில், வல்லுனர் கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது.

இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய, சாம் பிட்ரோடா கூறியதாவது: இக்கூட்டத்தில், தொழில்நுட்பம், தன்னாட்சி அதிகாரம், நிதி, மனித வளம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரசார் பாரதி தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆராய, 11 துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏழு கமிட்டிகள், தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்துவிட்டன. மீதமுள்ள நான்கு கமிட்டிகள், இரண்டொரு நாளில், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன. ஒவ்வொரு கமிட்டியும், தலா, 10 முதல் 12 பரிந்துரைகளை அளித்துள்ளன. இவற்றை தொகுத்து, முக்கியமான, 15 பரிந்துரைகளை பட்டியலிடுவதற்காக, மற்றொரு துணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, "அனலாக்' முறையில் உள்ள, தூர்தர்ஷன் ஒளிபரப்பை, முற்றிலும் டிஜிட்டல்மயத்திற்கு மாற்றுவது குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாகும்போது, தற்போது பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம், தேவையற்றதாகி விடும். இதை மற்றவர்களின் பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக விற்பதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஏழு கமிட்டிகள் அளித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில், வல்லுனர் கமிட்டி மீண்டும் கூடி, முதலாவது வரைவு அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம். அடுத்த மாதத்திற்குள் இறுதி அறிக்கை தயாராகிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)