பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
01:03
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், இந்திய ரயில்வேயின் வருவாய், 12.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 22,439 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 19,905 கோடி ரூபாயாக இருந்தது.கணக்கீட்டுக் காலத்தில் சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய், 10.52 சதவீதம் அதிகரித்து, 14,169 கோடி ரூபாயிலிருந்து, 15,660 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயணிகள் வாயிலான வருவாய், 17.48 சதவீதம் அதிகரித்து, 4,940 கோடி ரூபாயிலிருந்து, 5,803 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.ரயில் பெட்டிகள் வாயிலான வருவாய், 42.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 490 கோடி ரூபாயிலிருந்து, 696 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கணக்கீட்டு மாதங்களில் ரயில்களில் பயணம் செய்வதற்காக, முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 0.19 சதவீதம் உயர்ந்து, 139.25 கோடியில் இருந்து, 139.51 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|