பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
01:04
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடந்த வாரத்தின் இறுதியில் வலுவடைந்து வந்த நிலையில், நடப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று, அதன் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி கண்டது.நேற்றைய அன்னிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 34 கா”கள் குறைந்து, 57.87 ஆக சரிவடைந்தது. சென்ற வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 57.53 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.நேற்று, சர்வதேச நிதிச் சந்தையில், டாலருக்கான தேவை அதிகரித்தது.
இதையடுத்து உள்நாட்டில், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள், அதிக அளவில் டாலரை வாங்கியதால், அதன் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு குறைந்தது.வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு, அதிகபட்சமாக, 57.90 வரையிலும், குறைந்தபட்சமாக, 57.65 வரையிலும் சென்றது.வரும் நாட்களில், அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|