பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
01:07
புதுடில்லி:சென்ற ஏப்ரல் - மே மாதங்களில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3.8 சதவீதம் உயர்ந்து, 71,379 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், ”ங்க வரி வாயிலாக, 28,080 கோடியும், சேவை வரி மூலம், 19,710 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.இதே மாதங்களில், உற்பத்தி வரி வாயிலாக, 23,589 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற மே மாதம், மறைமுக வரி வசூல், 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37,695 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே மாதத்தில், தங்கம், சேவை, உற்பத்தி வரிகள் வாயிலாக, முறையே, 14,997 கோடி, 8,998 கோடி மற்றும், 13,700 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், மறைமுக வரிகள் மூலம், 5.65 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசுஇலக்கு நிர்ணயித்துள்ளது.சென்ற, 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், மறைமுக வரி வசூல் இலக்கு, 5.05 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 4.69 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. எனினும், இந்த இலக்கை விட, கூடுதலாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|