பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
01:07
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, விறுவிறுப்புடன் காணப்பட்டது. ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டிவிகிதங்களை குறைக்கவில்லை.இது, சந்தை எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்த நிலையிலும், ரூபாய் மதிப்பு உயர்ந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனால், பங்கு வர்த்தகம் சூடு பிடித்து காணப்பட்டது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்து. நேற்றைய வியாபாரத்தில், தொலைத் தொடர்பு, மோட்டார் வாகனம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 147.94 புள்ளிகள் அதிகரித்து, 19,325.87 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,344.28 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,084.68 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாடா மோட்டார்ஸ், மாருதி ”சூகி உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 41.65 புள்ளிகள் உயர்ந்து, 5,850.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,854.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,770.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|