பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
12:49
சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் விஷேசம் என்னவென்றால் இந்நிறுவனத்தின் முதல் வாட்டர் புரூப் மொபைல் இதுவாகும். சோனி நிறுவனத்தின் எக்ஸ்ப்ரியாவுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது இந்த எஸ் 4 ஆக்டிவ்.
சரி இனி இந்த போனை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்...
இது அதன் மூல மொபைல் போனைக் காட்டிலும் சற்று கரடு முரடான தோற்றத்துடன் உள்ளது. தூசு எதனையும் உள்ளே விடாது. அது மட்டுமின்றி, மூன்று அடி ஆழ நீரில், 30 நிமிடங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். நீர் உள்ளே புகாது. இதன் மூலம் நீருக்கடியில் போட்டோ எடுப்பவர்களுக்கு இந்த மாடல் சாம்சங் போன், ஒரு கூடுதல் வசதி அளிப்பதாகவே உள்ளது. சில மாற்றங்களும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 அங்குல சூப்பர் AMOLED Plus டிஸ்பிளேக்குப் பதிலாக, எச்.டி. டி.எப்.டி., எல்.சி.டி. பேனல் தரப்பட்டுள்ளது. ஆனால், அதே குவாட் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. ராம் 2 ஜிபி, 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஏர் ஜெஸ்ச்சர் போன்ற எஸ் 4 வசதிகள் அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. இது வெளியாகும் நாள் மற்றும் விலை குறித்த தகவல்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|