பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
17:45
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 18ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 103 புள்ளிகளும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 36 புள்ளிகளும் சரிந்தன.
லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்றதாலும், அமெரிக்க பெடரல் வங்கியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளியாகலாம் என்று உலகநாடுகள் அனைவரும் எதிர்பார்ப்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடைந்து இருப்பதாலும் இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவுடன் ஆரம்பித்து சரிவுடன் முடிந்து இருக்கின்றன.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 102.59 புள்ளிகள் சரிந்து, 19,223.28 புள்ளிகளும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 36.45 புள்ளிகள் சரிந்து 5,863.40 எனும் அளவிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் அநேக பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, உள்ளிட்ட பங்குகளும், என்டிபிசி, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளும் சரிவில் முடிந்தன. அதேசமயம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், இன்போசிஸ், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|