பதிவு செய்த நாள்
20 ஜூன்2013
00:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று ஏற்ற, இறக்கமாக இருந்தது. பங்குச் சந்தையில், துவக்கத்தில் வர்த்தகம் சரிவடைந்து காணப்பட்டது. எனினும், நண்பகலுக்கு பிறகு, அதிக அளவில் பங்குகள் கைமாறியதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 0.12 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.
அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில், கடன் பத்திரங்களை வாங்கும் திட்டம் தொடர் வதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், தொலைத் தொடர்பு, வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.அதே சமயம், உலோகம், மருந்து, பொறியியல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 22.42 புள்ளிகள் அதிகரித்து, 19,245.70 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,274.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,100.13 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், எச்.டீ.எப்.சி. பேங்க் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், டாட்டா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 8.65 புள்ளிகள் உயர்ந்து, 5,822.25 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,828.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,777.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|