பதிவு செய்த நாள்
20 ஜூன்2013
10:30
மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஜூன் 20ம் தேதி, வியாழக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவுடன் துவங்கி இருக்கின்றன. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்திற்கு கீழ் சென்றன.
இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி, அமெரிக்க பெடரல் வங்கியில் எதிர்பார்த்த அளவுக்கு முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால் உலகளாவிய ஒரு ஏமாற்றம், அதன் காரணமாக ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 423.05 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்திற்கு கீழ் சென்று 18,822.65 எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 122.40 புள்ளிகள் சரிந்து 5,699.85 எனும் நிலையிலும் காணப்பட்டன. தொடர்ந்து மதியம் 2மணியளவில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்து 18,744.36 எனும் அளவில் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து, ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.52 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.08 சதவீதமும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|