பதிவு செய்த நாள்
21 ஜூன்2013
01:46
புதுடில்லி:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை, லிட்டருக்கு, 3-5 ரூபாய் உயர்ந்துள்ளது.கடந்த சில வாரங்களாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ளதால், உள்நாட்டில், இதன் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு சரிவால், இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளது. இதைஅடுத்து இதன் விலை லிட்டருக்கு, 3-5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.கடந்த ஒரு சில மாதங்களில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 54ல் இருந்து, 58 வரை உயர்ந்தது. இதனால், இறக்குமதி ஆகும் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு, 4.50 ரூபாய் வரை அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு, சர்வதேசச் சந்தையில், ஒரு டன் பாமாயில் விலை, 1,040 டாலராக இருந்தது. இது, தற்போது, 840 டாலராக சரிவடைந்து உள்ளது.
ஆனால், ரூபாய்மதிப்பு சரிவால், இறக்குமதி செய்யப்படும், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என, மேத்தா குறிப்பிட்டார்.நடப்பு 2012- 13ம் பருவத்தில் (நவ., - அக்., ) நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.08 கோடி டன்னாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|