பதிவு செய்த நாள்
21 ஜூன்2013
01:49
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக்கிழமையன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்து வருவதால், கடன் பத்திரங்களை வாங்கும் திட்டம், அடுத்த ஆண்டில் முடிவுக்கு வரலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி தலைவர் பென் பெர்னகி அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் ஆட்டம் கண்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தகத்தில், "சென்செக்ஸ்' 2.74 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்து போனது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், வங்கி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 526.41 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,719.29 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,069.20 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,687.19 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, சன்பார்மா ஆகிய இரு நிறுவனங்கள் தவிர, ஏனைய, 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்து போனது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 166.35 புள்ளிகள் சரிவடைந்து, 5,655.90 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,755 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,645.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|