பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
17:02
புதுடில்லி : மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டி, டில்லியில் கூடியது. இந்த கூட்டத்தில், இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.,) ஒரு கோடி டன் கோதுமையையும், ஐந்து லட்சம் டன் அரிசியையும், திறந்த வெளி சந்தையில் விற்பனை செய்யவும், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய உணவு அமைச்சர், தாமஸ் கூறுகையில், ""திறந்தவெளி சந்தையில், உணவுப் பொருட்களை விற்பதன் மூலம், கோதுமை மற்றும் அரிசியின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்,'' என்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இயற்கை எரிவாயு விலை உயர்வு குறித்து, இந்த கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. "மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி, திரிபுரா சென்றிருப்பதால், இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|