ஒரு கோடி டன் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு!ஒரு கோடி டன் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு! ... கடந்த வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.496 குறைவு கடந்த வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.496 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 98 கோடி டாலர் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2013
23:27

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 98 கோடி டாலர் (5,488 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,066 கோடி டாலராக (16.28 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 178 கோடி டாலர் உயர்ந்து, 28,968 கோடி டாலராக இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 96 கோடி டாலர் அதிகரித்துள்ளது.மேலும், கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 1.30 கோடி டாலர் மற்றும் 68 லட்சம் டாலர் அதிகரித்துள்ளது.
அதேசமயம்,கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,283 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.சென்ற மார்ச் மாதம் வரையிலான காலத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 139 கோடி டாலர் சரிவைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின், புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)