பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
23:27
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 98 கோடி டாலர் (5,488 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,066 கோடி டாலராக (16.28 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 178 கோடி டாலர் உயர்ந்து, 28,968 கோடி டாலராக இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 96 கோடி டாலர் அதிகரித்துள்ளது.மேலும், கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு முறையே, 1.30 கோடி டாலர் மற்றும் 68 லட்சம் டாலர் அதிகரித்துள்ளது.
அதேசமயம்,கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,283 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.சென்ற மார்ச் மாதம் வரையிலான காலத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 139 கோடி டாலர் சரிவைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின், புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|