பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
00:25
சென்னை:உலகளவில், சிமென்ட் உற்பத்தியில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதார மந்த நிலையால், சிமென்ட் துறையின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் சிமென்ட் துறையின் வளர்ச்சி, 5.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டில், 6.6 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு வீழ்ச்சியால் நிலக்கரி இறக்குமதி செலவினம் அதிகரிப்புபோன்றவை இத்துறை நிறுவனங்களுக்கு அதிக இடர்பாட்டை அளிப்பதாக உள்ளன.
வளர்ச்சி:எனவே, மத்திய, மாநில அரசுகள், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை அதிகளவில்மேற்கொண்டால் மட்டுமே, இந்திய சிமென்ட் துறை நல்ல அளவில் வளர்ச்சி காணும் என, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.அவர்மேலும் கூறியதாவது:தற்போது, நம்நாட்டில் உள்ள சிமென்ட் ஆலைகளின் உற்பத்தி திறன், 32கோடி டன் என்ற அளவில் உள்ளது. ஆனால், நாடு தழுவிய அளவில், சிமென்டிற்கானதேவை குறைந்துள்ளதால், இத்துறை நிறுவனங்கள், 70-80 சதவீத அளவிற்கே, சிமெண்டை உற்பத்தி செய்து வருகின்றன.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், 1946ம் ஆண்டு துவங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், முதன் முதலில், பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்ட நிறுவனம் என்ற பெருமையை கொண்டுள்ளது.துவக்கத்தில், நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, ஆண்டுக்கு, 1 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இது, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இன்று ஆண்டுக்கு, 1.55கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ச்சி கண்டு உள்ளது.
தமிழகம்:நிறுவனத்திற்கு, தமிழகத்தில், மூன்று தொழிற்சாலைகளும், ஆந்திராவில் நான்கு ஆலைகளும், ராஜஸ்தானில் ஒரு ஆலையும் உள்ளன. இவை தவிர, தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு அரவை ஆலை உள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், நிறுவனம், 4,613கோடி ரூபாய் விற்று முதலில், 164கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
நிறுவனம், அதன் சுயதேவைக்காக, நிலக்கரி, எரிவாயு அடிப்படையிலான, அனல்மின் உற்பத்தி மற்றும் காற்றாலைகள் வாயிலாக, 200 மெகா வாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு உள்ளது.மேலும், நிறுவனத்திற்கு, சிமென்ட் உற்பத்திக்காக ஆண்டுக்கு, 10 லட்சம் டன் நிலக்கரியும், மின் உற்பத்திக்காக, 4 லட்சம் டன் நிலக்கரியும் தேவைப்படுகிறது. இதில் பெரும் பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
இந்தோனேஷியா:கடந்த மூன்று ஆண்டுகளில், நிறுவனம் மின் உற்பத்தி திட்டங்கள் (900கோடி ரூபாய்), இந்தோனேஷியாவில் நிலக்கரி ”ரங்கமேம்பாட்டு திட்டங்கள் (100கோடி ரூபாய்) மற்றும் மூன்று சரக்கு கப்பல்கள் வாங்கியது (150கோடி ரூபாய்)போன்றவற்றிற்காக, 1,150கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.சென்றமே மாதத்தில், இந்தோனேஷியாவில் வாங்கப்பட்டுள்ள நிலக்கரி ”ரங்கத்திலிருந்து, மின் உற்பத்திக்காக, 42 ஆயிரம் டன் நிலக்கரி, சொந்தக் கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு, ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|