30 ஆண்டுகளுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு30 ஆண்டுகளுக்கு பின் தங்கம் விலை தொடர் சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 குறைவு ...
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்:இயற்கை எரிவாயு விலையும் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
12:04

புதுடில்லி : பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியார்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது : தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களான ஜி.எஸ்.ஏ.டி -15 மற்றும் ஜி.எஸ்.ஏ.டி-16 அகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; லட்சத் தீவுகளுக்கு மானிய ஹெலிகாப்டர் சேவையை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; மும்பை மெட்ரோ ரயில் சேவையில் ரூ. 23,136 கோடி மதிப்புடைய 3 வது வழித்தடத்தை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது; சுதந்திரமான நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது; இந்த மசோதா அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்; நிலக்கரியின் விலையை இனி கோல் இந்தியா நிறுவனம் நிர்ணயிக்கும்; நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை நிர்ணயக்க ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை; தேசிய உர நிறுவனத்தின் 7.64 சதவீத பங்குகளை விற்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது; செபியின் வேண்டுகோளுக்கிணங்க இந்த முடிவை எடுத்துள்ளது; எஸ் பேங்கின் வெளிநாட்டு பங்குகளை 60 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது; ரூ. 504 கோடி செலவில் 80 மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது; உள்நாட்டு உற்பத்தி சரிவு காரணமாக தேவையின் அடிப்படையில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது; உள்நாட்டு உற்பத்தி குறைவு காரணமாக இயற்கை எரிவாயுவின் இறக்குதி அதிகரித்துள்ளது; தற்போது உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் முதலீடுகள் இல்லை; அவ்வாறு முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் எரிவாயு உற்பத்தியும் அதிகரிக்கும்; இயற்கை எரிவாயுவின் புதிய விலையேற்றம் 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்; பொருளாதார பற்றாக்குறை காரணமாகவே எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதே தவிர யாருடைய வற்புறுத்தலாலும் அல்ல; டில்லி பால் திட்டத்தை தனியார் மயமாக்குவது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.1310 யாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)