பதிவு செய்த நாள்
28 ஜூன்2013
15:46
கோல்கட்டா : இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதே சமயம் நிதித்துறை கம்பெனிகளை ஆதரிப்பதற்காக தங்கம் இறக்குமதியை சிஏடி குறைத்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை தொடர்ந்து ஹச்.டி.எஃப்.சி., வங்கி, தங்கம் விற்பனையில் கிரெடிட் கார்ட் அனுமதிக்கப்பட்டாது என அறிவித்துள்ளது. நாட்டின் 2வது மிகப்பெரிய தனியார்த்துறை வங்கியான ஹச்.டி.எஃப்.சி., வங்கி, தங்க காசுகள் விற்பனையில் வாடிக்கையாள்களுக்கு அளித்திருந்த ஈசி ஈ.எம்.ஐ., வசதியையும் நிறுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வணிகம் சார்ந்த தங்கத்தின் மீதான முதலீட்டை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வங்கி தங்கம் வாங்குவதற்கு அளித்திருந்த கடன் கொள்கையிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நிதியமைச்சர் சிதம்பரத்தின் ஆலோசனையின் பேரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் தங்க காசு விற்பனையை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|