பதிவு செய்த நாள்
30 ஜூன்2013
01:00
மும்பை: உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில் @மற்கொண்ட நிகர முதலீடு, கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஜூன் மாதத்தில், முதன் முறையாக, 86 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.நடப்பு ஜூன் மாதம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம், இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு
விற்பனை, 9,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.காப்பீட்டு துறை:உள்நாட்டு நிதி நிறுவனங்களில், காப்பீட்டு துறையை சேர்ந்த நிறுவனங்கள், சென்ற மாதத்தில், இறுதி இரு வாரங்களில், அதிக அளவில் பங்குகளை வாங்கி உள்ளன.குறிப்பாக, எல்.ஐ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம், நடப்பு மாதத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிஉள்ளது.
அதே சமயம், இதேமாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 300 கோடி ரூபாய்மதிப்பிற்கு அதிகமான பங்குகளை விற்பனை செய்துள்ளன.உள்நாட்டு நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு அதிகரித்ததால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' அதிக வீழ்ச்சி காணாமல், தடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஜூன் மாதம், "சென்செக்ஸ்', 1.8 சதவீதம் சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுமற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, உள்நாட்டு நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு, கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு, நடப்பு ஜூன் மாதம் அதிகரித்துள்ளது.
ரெப்@பா விகிதம்:குறிப்பாக, எரிவாயு விலையை உயர்த்தி நிர்ணயித்தது, நிலக்கரி துறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றால், உள்நாட்டு நிதிநிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்வதை உயர்த்தி வருகின்றன என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்."ரிசர்வ் வங்கி, சென்ற 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல், "ரெப்போ' விகிதங்களை 1.25 சதவீதம் குறைத்துள்ளது.
இது மட்டுமின்றி, மிகச் சிறந்த நிறுவனங்களின் பங்குகள், குறைந்த விலையில் கிடைப்பதும், நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிக்க காரணம்' என, முன்னணி காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உதாரணமாக, பொதுத் துறையை சேர்ந்த பாரத் மிகு மின் கழக நிறுவனத்தின் பங்கு, தற்@பாது, 13 சதவீதம் குறைந்த விலையில் கைமாறிக் கொண்டு உள்ளது.அது போன்று, டாட்டா மோட்டார்ஸ் (10.21 சதவீதம்), என்.டி.பி.சி., (6.93 சதவீதம்), கோல் இந்தியா (6.77 சதவீதம்) போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலையும், மிகவும் குறைந்துள்ளன.
இதனால், @மற்கண்ட நிறுவன பங்குகளின் பக்கம், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது.பெரும்பாலான நிறுவனங்கள், தற்போது டிவிடெண்டை அறிவித்து வருகின்றன. இந்த சமயத்தில், அந்த நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவடைந்திருப்பது, காப்பீட்டு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. அதனால், அவை தாராளமாக பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.
பரஸ்பர நிதி திட்டம்:அதே சமயம், பங்குச் சந்தை ஏற்றத்தின் போதும், வீழ்ச்சியின் போதும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, அதிக அளவில் முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர்.இதனால், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதனால், அவற்றின் நிகர பங்கு முதலீடு குறைந்துள்ளது.நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமாக நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|