பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:48
குன்னூர்:வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழக தேயிலையை வாங்க, வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.வர்த்தக சங்கம்:நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தில், 25வது ஏலம் நடந்தது. 18.23 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது.
இதில், 12.72 லட்சம் கிலோ இலை ரகமும், 5.51 லட்சம் கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும்.மொத்தம், 18.23 லட்சம் கிலோவில், 94 சதவீதம், அதாவது, 17.13 லட்சம் கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு, 1 ரூபாய் கூடுதல் விலை கிடைத்தது.
இலை ரகம், சராசரியாக கிலோவுக்கு, 70 முதல் 75 ரூபாய் வரையிலும், உயர் ரகம், 115 ரூபாய் முதல், 150 ரூபாய் வரையும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை, 79 ரூபாய் முதல், 86 ரூபாய் வரையும், உயர் வகை, 120 ரூபாய் முதல், 160 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. சி.டி.சி., ரகம் அதிகபட்சமாக, ஒரு கிலோ, 174 ரூபாய்க்கும், டஸ்ட் ரகம் அதிகபட்சமாக, 220 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த ஏலத்துக்கு மொத்தம், 18.87 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு தயாராக உள்ளது.கடந்த வாரம் மொத்தம், 14.85 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. சராசரியாக கிலோவுக்கு, 90.45 ரூபாய் வீதம், 13.46 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. சராசரி விலை, 90.65 ரூபாயாக இருந்தது. இந்த வாரம் கூடுதலாக, 74 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதே போல, அரசு கூட்டுறவு தேயிலை ஏல மையத்திலும், விற்பனை அதிகரித்து உள்ளது. விற்பனைக்கு வந்த, 4.90 லட்சம் கிலோவில், 90 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.போக்குவரத்து:வட மாநிலங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேயிலை வர்த்தகர்கள், தமிழகம் நோக்கி வருவதால், குன்னூர் தேயிலை மையங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|