நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடையும்நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடையும் ... பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு ...
வட மாநிலங்களில் கனமழை:குன்னூரில் தேயிலை விற்பனை விறுவிறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:48

குன்னூர்:வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழக தேயிலையை வாங்க, வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.வர்த்தக சங்கம்:நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தில், 25வது ஏலம் நடந்தது. 18.23 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது.
இதில், 12.72 லட்சம் கிலோ இலை ரகமும், 5.51 லட்சம் கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும்.மொத்தம், 18.23 லட்சம் கிலோவில், 94 சதவீதம், அதாவது, 17.13 லட்சம் கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு, 1 ரூபாய் கூடுதல் விலை கிடைத்தது.
இலை ரகம், சராசரியாக கிலோவுக்கு, 70 முதல் 75 ரூபாய் வரையிலும், உயர் ரகம், 115 ரூபாய் முதல், 150 ரூபாய் வரையும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை, 79 ரூபாய் முதல், 86 ரூபாய் வரையும், உயர் வகை, 120 ரூபாய் முதல், 160 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. சி.டி.சி., ரகம் அதிகபட்சமாக, ஒரு கிலோ, 174 ரூபாய்க்கும், டஸ்ட் ரகம் அதிகபட்சமாக, 220 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த ஏலத்துக்கு மொத்தம், 18.87 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு தயாராக உள்ளது.கடந்த வாரம் மொத்தம், 14.85 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. சராசரியாக கிலோவுக்கு, 90.45 ரூபாய் வீதம், 13.46 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. சராசரி விலை, 90.65 ரூபாயாக இருந்தது. இந்த வாரம் கூடுதலாக, 74 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதே போல, அரசு கூட்டுறவு தேயிலை ஏல மையத்திலும், விற்பனை அதிகரித்து உள்ளது. விற்பனைக்கு வந்த, 4.90 லட்சம் கிலோவில், 90 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.போக்குவரத்து:வட மாநிலங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேயிலை வர்த்தகர்கள், தமிழகம் நோக்கி வருவதால், குன்னூர் தேயிலை மையங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)