பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:50
புதுடில்லி:ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், 42,674 ஹோண்டா சிட்டி கார்களில், "பவர் விண்டோ' ஸ்விட்சை மாற்றித் தருவதற்காக, அவற்றை திரும்ப பெறுகிறது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட, இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஹோண்டா சிட்டி கார்களில், "பவர் விண்டோ' சுவிட்சுகளை மாற்றித்தர நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இந்த சுவிட்சுகளில், தண்ணீர் அல்லது வேறு ஏதாவது திரவம் புகுந்து, ஓட்டுனர் பக்கத்து கண்ணாடி செயல்படுவதில் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய சுவிட்ச் பொருத்தி தரப்படும். வாடிக்கையாளர்கள், நாடு முழுவதும் உள்ள ஹோண்டா முகவர்களை தொடர்பு கொண்டு, புதிய சுவிட்சை இலவசமாக பொருத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|