வட மாநிலங்களில் கனமழை:குன்னூரில் தேயிலை விற்பனை விறுவிறுப்புவட மாநிலங்களில் கனமழை:குன்னூரில் தேயிலை விற்பனை விறுவிறுப்பு ... பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு பொருளாதார மண்டலங்களின்ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் வழங்கிய சில்லரைகடன் 16.3 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:51

மும்பை:சென்ற மே மாதத்தில், வங்கிகள் வழங்கிய சில்லரை கடன், கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 16.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒட்டு மொத்த அளவில், 9.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வழங்கப்பட்ட ஒட்டு மொத்த சில்லரை கடனில், மோட்டார் வாகன துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், 27.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் சாதனங்கள் துறைக்கான கடன், 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இவை தவிர, வங்கிகள் வழங்கிய வீட்டு வசதிக்கான கடன், 17.1 சதவீதம் அதிகரித்து, 1.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு 2013-14ம் நிதியாண்டில், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-ஜூன்), வங்கிகள் வழங்கிய சில்லரை கடன், 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.வங்கிகளின் கடன் வளர்ச்சியில், சில்லரை கடன்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சில்லரை கடன்கள், வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நிறுவனங்கள் கடன் பெறுவது மிகவும் குறைந்து போயுள்ளது.மேலும், வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை காட்டிலும், சில்லரை கடன்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வங்கிகள் சில்லரை கடன் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)