பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:51
மும்பை:சென்ற மே மாதத்தில், வங்கிகள் வழங்கிய சில்லரை கடன், கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 16.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒட்டு மொத்த அளவில், 9.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வழங்கப்பட்ட ஒட்டு மொத்த சில்லரை கடனில், மோட்டார் வாகன துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், 27.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நுகர்வோர் சாதனங்கள் துறைக்கான கடன், 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இவை தவிர, வங்கிகள் வழங்கிய வீட்டு வசதிக்கான கடன், 17.1 சதவீதம் அதிகரித்து, 1.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு 2013-14ம் நிதியாண்டில், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-ஜூன்), வங்கிகள் வழங்கிய சில்லரை கடன், 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.வங்கிகளின் கடன் வளர்ச்சியில், சில்லரை கடன்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சில்லரை கடன்கள், வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நிறுவனங்கள் கடன் பெறுவது மிகவும் குறைந்து போயுள்ளது.மேலும், வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை காட்டிலும், சில்லரை கடன்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வங்கிகள் சில்லரை கடன் வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|