பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:52
புதுடில்லி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.இ.இசட்.,) வாயிலான ஏற்றுமதி, 4.76 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (3.65 லட்சம் கோடி ரூபாய்) விட, 31 சதவீதம் அதிகமாகும் என, ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மொத்தம் உள்ள, 389 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 170 மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்மண்டலங்களின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்ததன் காரணமாக, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எனினும், சென்ற நிதியாண்டில், எண்ணெய்மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரித்ததையடுத்து, முன் எப்போதும் இல்லாத அளவாக, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில், ஒட்டு மொத்த அளவில், 2.36 லட்சம் கோடி ரூபாய்முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடி வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என, ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|