வெளிநாடு வாழ் இந்தியர்கள்அனுப்பிய தொகை 15 சதவீதம் உயர்வுவெளிநாடு வாழ் இந்தியர்கள்அனுப்பிய தொகை 15 சதவீதம் உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
"நடப்பு கணக்கு பற்றாக்குறை4.4 சதவீதமாக இருக்கும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:56

புதுடில்லி:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.4 சதவீதமாக குறைந்திருக்கும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, சந்தை மதிப்பீட்டு அளவான, 5 சதவீதத்தை விட, குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2,800 கோடி டாலராக இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இது, வரலாறு காணாத அளவிற்கு, 6.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜன.,-மார்ச்), இது, 3.6 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.அதேசமயம், முந்தைய 2011-12ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.4 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்மற்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி செலவினம் குறைந்து, நடப்பு முழு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.4 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என, மெரில் லின்ச் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)