பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:56
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.4 சதவீதமாக குறைந்திருக்கும் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, சந்தை மதிப்பீட்டு அளவான, 5 சதவீதத்தை விட, குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2,800 கோடி டாலராக இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இது, வரலாறு காணாத அளவிற்கு, 6.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜன.,-மார்ச்), இது, 3.6 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.அதேசமயம், முந்தைய 2011-12ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.4 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்மற்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி செலவினம் குறைந்து, நடப்பு முழு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.4 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என, மெரில் லின்ச் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|