பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
12:27
பழநி:கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், தரமான வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளது. சந்தைக்கு, தரம் குறைந்த வெல்லம் வருவதால், விலை குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழையில்லை. இதனால் கரும்பு விளைச்சல் குறைந்தது. ஒரு டன் கரும்பு, 3,500 ரூபாய்க்கு வாங்கி, ஆலையில் வெல்லம் காய்ச்சுகின்றனர். இந்த வெல்லம், நெய்க்காரப்பட்டி விவசாயிகள் வெல்ல சந்தையில் விற்கப்படுகிறது. மாதம், 15 ஆயிரம் ரூபாய், "சிப்பம்' வரை விற்ற சந்தையில், இந்த மாதம், 10 ஆயிரம் ரூபாய், "சிப்பம்' தான் விற்பனைக்கு வந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால், வெள்ளை, செங்களை வெல்ல உற்பத்தி குறைந்து, கருப்பு நிற வெல்ல உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை வாங்க, கேரளா, ஆந்திர மாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், விலை குறைந்துள்ளது.
நெய்க்காரப்பட்டி வியாபாரி அபுதாகீர் கூறுகையில், ""மழை இல்லாததால், கரும்பு விளைச்சல் குறைந்து உள்ளது. தரம் குறைந்த கரும்பில் தயாரித்த வெல்லம் தான், விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, 30 கிலோவுக்கு, 1,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது, 1,600 ரூபாய் வரை விற்கப்பட்டது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|