சிமென்ட் விலை மீண்டும் உயர்வுசிமென்ட் விலை மீண்டும் உயர்வு ... விமான எரிபொருள் விலை உயர்வு விமான எரிபொருள் விலை உயர்வு ...
எல்.ஐ.சி.,யின் நிறுவன முகவராக சிண்டிகேட் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
16:50

மும்பை:பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கி, எல்.ஐ.சி.,யின், காப்பீடுகளை வழங்கும், கார்பரேட் முகவராக செயல்பட, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 2013, ஜூன் 27ல் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் எல்.ஐ.சி., தலைவர் தாமஸ் மேத்தீவ் மற்றும் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.ஜி சங்வி ஆகியோர் தலைமையில் மும்பையில் கையெழுத்தானது. இதன்படி சிண்டிகேட் வங்கிக்கு எல்.ஐ.சி.,யின் காப்பீடுகளை விற்பனை செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

2013 மார்ச் 31ன் படி, எல்.ஐ.சி.,யின் மொத்த வருமானம் 2,08,911 கோடி ரூபாய். இதன் மொத்த சொத்து மதிப்பு 2012 மார்ச் 31ன் படி, 14,17,891 ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சி.,க்கு 2,048 கிளைகள், 1275 சாட்டிலைட் (துணை கிளை) அலுவலகங்கள் உள்ளன. இன்சூரன்ஸின் மொத்த சந்தை மதிப்பில் 83.24 சதவீதம் எல்.ஐ.சி.,யிடம் உள்ளது. முதல் பிரீமியம் வருவாய் மூலம் 2013, மார்ச் 31ன் படி, 71.25 சதவீதம் எல்.ஐ.சி.,யிடம் உள்ளது. எல்.ஐ.சி.,யின் நிறுவன முகவராக சேரும், 9வது வங்கி சிண்டிகேட் வங்கி.

இவ்வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சம். 28 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் வங்கி செயல்படுகிறது. 2999 கிளைகள் உள்ளன. 2013 மார்ச் 31ன் படி, இதன் மொத்த வியாபார மதிப்பு 3,34,779 கோடி. தற்போது எல்.ஐ.சி., யின் நிறுவன முகவராக சேர்ந்துள்ளதன் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் வங்கிக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி.,யின் மேலாண்மை இயக்குனர் எஸ்.கே.ராய், சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குனர் அன்ஜனேயா பிரசாத், மற்றும் பொது மேலாளர் எஸ்.கே.தின்ங்ரா கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)