பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
16:50
மும்பை:பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கி, எல்.ஐ.சி.,யின், காப்பீடுகளை வழங்கும், கார்பரேட் முகவராக செயல்பட, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 2013, ஜூன் 27ல் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் எல்.ஐ.சி., தலைவர் தாமஸ் மேத்தீவ் மற்றும் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.ஜி சங்வி ஆகியோர் தலைமையில் மும்பையில் கையெழுத்தானது. இதன்படி சிண்டிகேட் வங்கிக்கு எல்.ஐ.சி.,யின் காப்பீடுகளை விற்பனை செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
2013 மார்ச் 31ன் படி, எல்.ஐ.சி.,யின் மொத்த வருமானம் 2,08,911 கோடி ரூபாய். இதன் மொத்த சொத்து மதிப்பு 2012 மார்ச் 31ன் படி, 14,17,891 ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சி.,க்கு 2,048 கிளைகள், 1275 சாட்டிலைட் (துணை கிளை) அலுவலகங்கள் உள்ளன. இன்சூரன்ஸின் மொத்த சந்தை மதிப்பில் 83.24 சதவீதம் எல்.ஐ.சி.,யிடம் உள்ளது. முதல் பிரீமியம் வருவாய் மூலம் 2013, மார்ச் 31ன் படி, 71.25 சதவீதம் எல்.ஐ.சி.,யிடம் உள்ளது. எல்.ஐ.சி.,யின் நிறுவன முகவராக சேரும், 9வது வங்கி சிண்டிகேட் வங்கி.
இவ்வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சம். 28 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் வங்கி செயல்படுகிறது. 2999 கிளைகள் உள்ளன. 2013 மார்ச் 31ன் படி, இதன் மொத்த வியாபார மதிப்பு 3,34,779 கோடி. தற்போது எல்.ஐ.சி., யின் நிறுவன முகவராக சேர்ந்துள்ளதன் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் வங்கிக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ.சி.,யின் மேலாண்மை இயக்குனர் எஸ்.கே.ராய், சிண்டிகேட் வங்கியின் செயல் இயக்குனர் அன்ஜனேயா பிரசாத், மற்றும் பொது மேலாளர் எஸ்.கே.தின்ங்ரா கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|