பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:09
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, சென்ற ஜூன் மாதத்தில், 3.25 கோடி டன்னாக உள்ளது. எனினும், இது, இலக்கு அளவான, 3.50 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனம், 3.70 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்துள்ளது. இருந்தபோதிலும், இது, விற்பனை இலக்கு அளவான, 3.98 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில், இந் நிறுவனம், 10.28 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது, இலக்கு அளவான, 10.68 கோடி டன்னை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை, 11.50 கோடி டன்னாக உள்ளது. இது, இலக்கு அள வான, 12.07 கோடி டன்னை விட குறைவாகும்.நிலக்கரி அமைச்சகம், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், 48.20 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே போன்று, 49.20 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|