பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:17
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தம் புதன்கிழமைஅன்று மிகவும் மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதையடுத்து, "சென்செக்ஸ்' 1.47 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
சீனாவின் சேவை துறையின் வளர்ச்சி, ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, சென்ற ஜூன் மாதத்தில் சரிவடைந் துள்ளது என்ற செய்தி வெளியானதைஅடுத்து, இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள் மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது,286.06 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,177.76 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,347.11 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,147.31 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல், ஐ.டி.சி., ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்து இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 86.65 புள்ளிகள் சரிவடைந்து, 5,770.90 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,815 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,760.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|