பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:20
பல்லடம்:கறிக்கோழி இறைச்சிவிலை, ஒரே வாரத்தில்,கிலோவுக்கு, 60 ரூபாய் சரிந்துள்ளது. பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. தினமும், 10 லட்சம் கறிக்கோழிகள், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை:கறிக்கோழி உற்பத்தி குறைப்பு, பண்ணைகளில் தண்ணீர் பற்றாக் குறை,கோழி உற்பத்தி பாதிப்பு ஆகிய காரணங்களால்,தேவை அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த மாதம், 12ம்தேதி, ஒரு கிலோ கறிக்கோழி, பண்ணை கொள்முதல் விலை, 100 ரூபாயாக உயர்ந்தது. 24ம் தேதி வரை, இதே விலை நீடித்தது.
அப்போது, ஒரு கிலோ கோழிக்கறி, சில்லரை விலையில், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக, கறிக்கோழிக்கான தேவை, குறையத் துவங்கியது.இதன் எதிரொலியாக, பண்ணை கொள்முதல் விலை, மெதுவாக சரிந்து, தற்போது, கிலோ, 65 ரூபாயாக உள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு, 35 ரூபாய் குறைந்துள்ளதால், கறிக் கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உற்பத்தி செலவு:தற்போது, ஒரு கிலோ கறிக்கோழிக்கான உற்பத்தி செலவு, 70 ரூபாய் வரை உள்ளது.கடந்த, 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை சில்லரை விற்பனை கடைகளில், கிலோ,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழி இறைச்சி, தற்போது, 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|