கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திராவின் புதிய அறிமுகம் சென்சுரோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
17:15

மஹிந்திரா டூ வீலர்ஸ் தன் புதிய மஹிந்திரா சென்சுரோ மோட்டார் சைக்கிளை ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. 100 - 110 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் அதிக செயல்திறன், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மையுடன் மஹிந்திரா பிராண்ட்டின் பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்திய இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது சென்சுரோ. இதனால் "அதிக எண்ணிக்கையுள்ள வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அதிக போட்டியுள்ள "மோட்டோ ஜிபி மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பில் தங்கள் இருப்பை உணர்த்தும் வகையிலும் செஞ்சுரோ திகழ்கிறது' என்று கூறினார், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

இதன் ஸ்டைலான, முரட்டுத்தனமான தோற்றமும் புதிய தொழில்நுட்பம் மற்றும் சாதுர்யமான அம்சங்களும் இந்த பிரிவு மோட்டார் சைக்கிள்கள் எதிலும் காணமுடியாததாகும் என்று அறிமுக விழாவில் மஹிந்திரா -மஹிந்திராவின் டூவிலர் பிரிவின் தலைவர் அனூப் மாதூர் கூறினார். இந்திய சாலைகளுக்கு ஏற்ப 173மிமி கிரவுன்ட் கிளியரன்சுடனும், 1265மிமி வீல் பேசுடனும் ஸ்திரமான பயணத்திற்கு உத்திரவாதமளிக்கிறது சென்சுரோ. அகலமான இருக்கை, 5 ஸ்டெப் பின்புற சஸ்பென்ஷன் நீண்ட தூர பிரயாணத்தை சுகமாக்குகிறது. பராமரிப்பு தேவைப்படாத பாட்டரி மற்றும் ஐந்து வருட உத்தரவாதம் வாடிக்கையாளர்களின் நிம்மதியை கூட்டுகிறது.

இதன் சாதுர்யமான Mci5 என்ஜின் சிறந்த செயல்திறனுடன், அதிக மைலேஜையும் வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் என்ஜின் இம்மொபலைசருடன் இணைந்த ஆன்ட்டி தெப்ட் அலார்ம், ரிமோட் பிலிப் கீ, பைன்ட் மீ லேம்ப், கைட் லாம்ப், டிஜிட்டல் டாஷ்போர்ட், சர்வீஸ் ரிமைன்டர், எகானமி மோட் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)