பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
00:21
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10 சதவீதம் சரி வடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் அதன் விலை உயர்வால், பொதுத்துறை நிறுவனங்களின் மூலப்பொருள் செலவினம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து உள்ளது.
அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் செலுத்துவதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், அதிக அளவில் டாலரை வாங்கி வருவதால், அதன் புழக்கம் குறைந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கு வழி வகுத்து உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, அன்னிய முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி வருகின்றன.இந்தியாவை பொறுத்தவரை, சென்ற ஜூன் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்துள்ள முதலீட்டில் இருந்து 700 கோடி டாலரை திரும்ப பெற்றுள்ளன.
இத்தகைய, டாலர் வழியிலான முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி வருவதால், சென்ற ஜூன் 26ம் தேதி, ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 60.72 ஆக வீழ்ச்சி கண்டது. அடுத்த இரண்டு நாட்களில், இந்த சரிவு கட்டுக்குள் வந்தது.இருந்தபோதிலும், நடப்பு ஜூலை மாதம் முதல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.இந்நிலையில், நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, அன்னிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு, முந்தைய தினத்தை விட, 11 கா”கள் சரிவடைந்து, 60.24 ஆக வீழ்ச்சி கண்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|