நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும்நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும் ... நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும் நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
00:21

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 10 சதவீதம் சரி வடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் அதன் விலை உயர்வால், பொதுத்துறை நிறுவனங்களின் மூலப்பொருள் செலவினம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து உள்ளது.
அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் செலுத்துவதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், அதிக அளவில் டாலரை வாங்கி வருவதால், அதன் புழக்கம் குறைந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கு வழி வகுத்து உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, அன்னிய முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி வருகின்றன.இந்தியாவை பொறுத்தவரை, சென்ற ஜூன் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்துள்ள முதலீட்டில் இருந்து 700 கோடி டாலரை திரும்ப பெற்றுள்ளன.
இத்தகைய, டாலர் வழியிலான முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி வருவதால், சென்ற ஜூன் 26ம் தேதி, ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 60.72 ஆக வீழ்ச்சி கண்டது. அடுத்த இரண்டு நாட்களில், இந்த சரிவு கட்டுக்குள் வந்தது.இருந்தபோதிலும், நடப்பு ஜூலை மாதம் முதல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.இந்நிலையில், நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, அன்னிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு, முந்தைய தினத்தை விட, 11 கா”கள் சரிவடைந்து, 60.24 ஆக வீழ்ச்சி கண்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)