பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
00:24
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின், கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் நன்கு இருந்தது. முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் தொடர்ந்து பங்குகளில் முதலீடு மேற்கொண்டதைஅடுத்து, "சென்செக்ஸ்' 0.44 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.
மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, நுகர்பொருட்கள், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 84.98 புள்ளிகள் அதிகரித்து, 19,495.82 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,640.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக,19,477.74 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங் களுள்,ஜிந்தால் ஸ்டீல்,ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட,16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,கெயில், பார்தி ஏர்டெல், மகிந்திரா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 30.95 புள்ளிகள் உயர்ந்து, 5,867.90 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,900.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,858.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|