நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும்நிறுவனங்களின் வருவாய் 6 சதவீதம் அதிகரிக்கும் ... துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 13.72 கோடி டன் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 13.72 கோடி டன் ...
நிலக்கடலை உற்பத்தி 5 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
00:26

நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், அதன் உற்பத்தி, 5 லட்சம் டன்னாக உயரும் என, மதிப் பிடப்பட்டு உள்ளது.முன்கூட்டிய பருவமழையால், நடப்பு கரீப் பருவத்தில் (மே-ஆக.,), நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 16.75 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
குஜராத்:பொதுவாக, நாடு முழுவதும், கோடையில், 49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படும். நிலக்கடலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத்தில், நல்ல அளவில் மழை பெய்துள்ளது.இதனால், நடப்பு ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, குஜராத்தில், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, 14.10 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் 2.20 லட்சம் ஹெக்டேராக இருந்தது.இதையடுத்து, நடப் பாண்டு கோடையில், குஜராத்தின் நிலக்கடலை உற்பத்தி, 1 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப் பட்டுள் ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கடலை உற்பத்தி உயர வழி வகுத்துள்ளது.
ஏற்றுமதி:கோடையில் உற்பத்தியாகும் நிலக்கடலை பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப் படுவது வழக்கம். இந் நிலையில், சர்வதேச மந்தநிலையால், நிலக்கடலை ஏற்றுமதி குறைந்துள்ளது.இதனால், உள்நாட்டில் நிலக்கடலை விலை சரிவடைந்துள்ளது.குஜராத் மொத்த விற்பனை சந்தைக்கு, நாளொன்றுக்கு,45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மூட்டை நிலக்கடலை வருகிறது. இதில், 60 சதவீதம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங் களில் இருந்து வரத்தாகிறது. அதிக வரத்து காரணமாக, கடந்த ஜூன் மாதம், 20 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டையின் விலை, 275 ரூபாய் குறைந்து, 1,090 - 1,100 ரூபாயில் இருந்து, 700 -840 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)