பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
00:26
நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், அதன் உற்பத்தி, 5 லட்சம் டன்னாக உயரும் என, மதிப் பிடப்பட்டு உள்ளது.முன்கூட்டிய பருவமழையால், நடப்பு கரீப் பருவத்தில் (மே-ஆக.,), நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 16.75 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
குஜராத்:பொதுவாக, நாடு முழுவதும், கோடையில், 49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படும். நிலக்கடலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத்தில், நல்ல அளவில் மழை பெய்துள்ளது.இதனால், நடப்பு ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, குஜராத்தில், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு, 14.10 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் 2.20 லட்சம் ஹெக்டேராக இருந்தது.இதையடுத்து, நடப் பாண்டு கோடையில், குஜராத்தின் நிலக்கடலை உற்பத்தி, 1 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப் பட்டுள் ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கடலை உற்பத்தி உயர வழி வகுத்துள்ளது.
ஏற்றுமதி:கோடையில் உற்பத்தியாகும் நிலக்கடலை பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப் படுவது வழக்கம். இந் நிலையில், சர்வதேச மந்தநிலையால், நிலக்கடலை ஏற்றுமதி குறைந்துள்ளது.இதனால், உள்நாட்டில் நிலக்கடலை விலை சரிவடைந்துள்ளது.குஜராத் மொத்த விற்பனை சந்தைக்கு, நாளொன்றுக்கு,45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மூட்டை நிலக்கடலை வருகிறது. இதில், 60 சதவீதம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங் களில் இருந்து வரத்தாகிறது. அதிக வரத்து காரணமாக, கடந்த ஜூன் மாதம், 20 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டையின் விலை, 275 ரூபாய் குறைந்து, 1,090 - 1,100 ரூபாயில் இருந்து, 700 -840 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|