பதிவு செய்த நாள்
06 ஜூலை2013
15:49
புதுடில்லி : ஜூன் மாதத்தில் தோல் பொருட்களின் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது. தோல் தொடர்பான பொருட்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. சர்வதேச அளவில் நம்நாட்டு தோல் பொருட்களுக்கான ஏற்றுமதி அதிகம் இருக்கும். இந்நிலையில் ஜூன் மாதத்துக்கான ஏற்றுமதி அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜூன் மாதத்தில் தோல் பொருட்களின் ஏற்றுமதி ரூ.2,442 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இது ரூ.2,414 கோடியாக இருந்தது. இதன்மூலம் 1 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது.
மேலும் 2012-13-ம் ஆண்டில் ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியாக இருந்தது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.80 கோடியாக அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் வேலை வாய்ப்புகளும் 50 லட்சமாக அதிகரிக்கும் என்றும், தற்போது 25 லட்சம் இந்த தொழில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|