பதிவு செய்த நாள்
07 ஜூலை2013
00:30
மும்பை:தங்கத்தின் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளால், இந்திய நகை நிறுவனங்கள், குறைந்த அளவில் தங்கம் பயன்படுத்தப்படும் வைர நகைகளின் விற்பனையில், தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன.தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. இதன் தாக்கத்தால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புசரிவடைந்து உள்ளது.தங்க நாணயங்கள்:அதுமட்டுமின்றி, உள்நாட்டில் தங்கத்திற்கான தேவையை குறைக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகள், தங்க நாணயங்களை விற்கவும், தங்கம் வாங்க கடன் கொடுக்கவும், ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இத்தகைய சூழலில், குறைந்த அளவில் தங்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நகைகள் மற்றும் வைர நகைகளின் பக்கம், நகைக் கடைக்காரர்களின் பார்வை திரும்பியுள்ளது.இதுகுறித்து, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர், ஹரிஷ் சோனி கூறுகையில், "நகை கடைக்காரர்கள், 14 காரட் கொண்ட தங்க நகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறைந்த காரட் நகைகளால், தங்கத்தின் பயன்பாடும், அதன் இறக்குமதியும் குறையும்,' என்று தெரிவித்தார்.குறைந்த காரட் கொண்ட நகைகள், தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகிய கூட்டு உலோகத்தில் உருவாக்கப்படுகின்றன. வைர நகைகள் தயாரிப்பில் இத்தகைய குறைந்த காரட் தங்கம் பயன்படுத்தப்படுகின்றன.
வழக்கமாக 22 காரட் தங்க நகை செய்வதற்கு தேவைப்படுவதை விட, 20-25சதவீதம் குறைந்த தங்கத்தில், வைர நகைகளை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டில் தங்கத்தின் மீது மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், குறைந்த அளவில் தங்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும், வைர நகைகளை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், நகை நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியர்களை கவர்வதற்கான முயற்சியில், முன்னணி நகை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.டாட்டா குழுமத்தை சேர்ந்த டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ஆகியவை, சிங்கப்பூர் மற்றும் துபாயின் முக்கிய நகரங்களில், அவற்றின் நகை கடைகளை திறந்துவருகின்றன.பயன்பாடு:இதனால், நடுத்தர கால அடிப்படையில், உள்நாட்டில், தங்கத்தின் பயன்பாடு குறைந்து, அதன் விலை ஸ்திர நிலைக்கு வரும். அதேசமயம், வைர நகைகளின் விற்பனை மூலம், வியாபாரத்தையும் தொய்வில்லாமல் மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் நகை நிறுவனங்கள், வியூகம் வகுத்துள்ளன.அதற்கேற்ப, நகைகளை பொறுத்தவரை, இன்றைய தலைமுறையினரின் கண்ணோட்டமும் மாறி வருகிறது. மக்கள், பாரம்பரியமாக, 22 காரட் தங்க நகைகளையே விரும்பி வாங்கி வருகின்றனர்.
ஆர்வம் :ஆனால், இன்றைய இளையசமுகத்தினரிடம் இத்தகைய நகைகளை வாங்குவதில் விருப்பம் குறைந்து வருகிறது. அவர்கள், குறைந்த காரட் தங்கம் கொண்டு தயாரிக்கப்படும் வைர நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், இத்தகைய வைர நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களின் வருவாய் உயர்ந்துள்ளதால், அவர்கள் தங்க நகைகளை விட, வைர நகைகளை வாங்கி அணிவதில் ஈடுபாடு கொண்டுள்ளதாக, நகைக்கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|