நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 320 கோடி டாலர்சரிவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 320 கோடி டாலர்சரிவு ... இந்தியா - இஸ்ரேல் வர்த்தகம்:600 கோடி டாலரை எட்டியது இந்தியா - இஸ்ரேல் வர்த்தகம்:600 கோடி டாலரை எட்டியது ...
சாகுபடி பரப்பளவு 402 லட்சம் ஹெக்டேராக உயர்வு:சாதகமான பருவ மழையால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:57

புதுடில்லி:நடப்பு ஆண்டு ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து, இதுவரையில், நாட்டின் பல மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை நன்கு பெய்து வருவதால், நடப்பு கரீப் பருவ வேளாண் சாகுபடியில், விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், சாதகமான பருவமழையால், பல்வேறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு, பன்மடங்கு அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் வித்துக்கள்:சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, உள்நாட்டில், சாகுபடி பரப்பளவு, 402 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்தாண்டின் இதே காலத்தில், பருவமழை குறைந்திருந்ததை அடுத்து, இவற்றின் சாகுபடி பரப்பளவு, 215 லட்சம் ஹெக்டேராக மிகவும் குறைந்து காணப்பட்டது. சென்ற வாரம் இறுதி வரையிலுமாக, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், பருத்தி, நெல் ஆகியவற்றின் சாகுபடி பரப்பளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த, 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஜூன் மாதத்தில், பருவமழை பொழிவு நன்கு இருந்ததையடுத்து, கடந்தாண்டை விட, இவ்வாண்டு சென்ற வார இறுதி வரையிலுமாக, 86 சதவீத அளவிற்கு சாகுபடி பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, கடந்தாண்டை விட, நான்கு மடங்கு அதிகரித்து, 26.52 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 110.27 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மத்தியபிரதேசத்தில், பொதுவாக, 53.45 லட்சம் ஹெக்டேரில் சோயா சாகுபடி மேற்கொள்ளப்படும். இவ்வாண்டு, இதுவரையிலுமாக, 49.29 லட்சம் ஹெக்டேரில், சோயா சாகுபடி நிறைவடைந்துள்ளது. இது, 90 சதவீத அளவாகும்.சோயா சாகுபடி:கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், இதே காலத்தில், இம்மாநிலத்தில் இதன் சாகுபடி பரப்பளவு, 4.15 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.மகாராஷ்டிரா மாநிலத்திலும், சோயா சாகுபடி பரப்பளவு, இதே காலத்தில், 12.55 லட்சம் ஹெக்@டரிலிருந்து, 23.12 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில், இவ்வாண்டு, தானிய உற்பத்தி, சோதனை அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில், இது வரையிலுமாக, சராசரி அளவை விட மிக அதிகளவில் மழை பெய்துள்ளது.இம்மாநிலத்தில், இதுவரை, 14.09 லட்சம் ஹெக்டேரில், நிலக்கடலை சாகுபடி பணி நிறைவடைந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2.19 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.ஒட்டு மொத்த அளவில், நாட்டின் நிலக்கடலை சாகுபடி பரப்பளவு, 5.84 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 22.59 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.பஞ்சாப், சத்தீஸ்கர், அரியானா ஆகிய மாநிலங்களில், நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு, கடந்தாண்டை விட, 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்:பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவும், 4 மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பளவு, 3.99 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது, தற்போது, 18.37 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மக்காச்சோளம், கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட இதர தானியங்கள் சாகுபடி பரப்பளவும், 23 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 65.55 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.பருத்தி:பருத்தி சாகுபடி பரப்பளவும், நடப்பு கரீப் பருவத்தில், 75 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் ஜூன் மாதம் இறுதி வரையிலுமாக, 46.61 லட்சம் ஹெக்@டரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது, தற்போது, 81.73 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பளவு, ஒட்டு மொத்த அளவில், இரண்டு மடங்கு அதிகரித்து, 46.61 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 81.73 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என, வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)