பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
01:09
புதுடில்லி:இந்தியாவின் சுவை மிகுந்த திராட்சைகள், நெதர்லாந்து மக்களை வசியப்படுத்தி உள்ளன. அவர்கள், சந்தைகளில், இந்திய திராட்சைகளை விரும்பிக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால், வர்த்தகர்கள், அதிக அளவில் இந்திய திராட்சைகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளனர்.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 325 கோடி ரூபாய் மதிப்பிலான திராட்சைகளை, நெதர்லாந்து இறக்குமதி செய்துள்ளது.
அதே சமயம், மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதியில், நெதர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை, ஐக்கிய அரபு நாடுகளும் (157 கோடி ரூபாய்), மூன்றாவது இடத்தை, இங்கிலாந்தும் (156 கோடி ரூபாய்) பிடித்துள்ளன.அடுத்த இடங்களில், ரஷ்யா (131 கோடி), சவுதி அரேபியா (67 கோடி), வங்கதேசம் (61 கோடி), தாய்லாந்து (34 கோடி), ஸ்வீடன் (34 கோடி), எகிப்து (23 கோடி), இலங்கை (21 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 1,259 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முந்தைய 2011-12 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், முறையே, 603 கோடி ரூபாய் மற்றும், 428 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|