பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
01:15
புதுடில்லி: மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 200-250 கோடி டாலராக சரிவடைந்திருக்கும் என, வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில், நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 89 சதவீதம் அதிகரித்து, 839 கோடி டாலராகவும், ஏப்ரல் மற்றும் மேஆகிய இரு மாதங்களில், இவற்றின் இறக்குமதி, 109 சதவீதம் உயர்ந்து, 1,588 @காடி டாலராகவும் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருவதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வருகிறது.
இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான, சுங்க வரியை, 2 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தியது.ரிசர்வ் வங்கியும், வங்கிகள் தங்கம் இறக்குமதி மேற்கொள்வதில், கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி, வெகுவாக குறைந்து வருகிறது என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2,010 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.இதனால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அம்சமாக உள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 830 டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|