பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
01:29
குன்னூர்:நடப்பு 2013ம் ஆண்டில், இது வரையிலுமாக, சர்வதேச தேயிலை உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில், 13.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.24 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதேகாலத்தில், 59.35 கோடி கிலோவாக இருந்தது.குறிப்பாக, கென்யாவில், கறுப்பு தேயிலை உற்பத்தி, சென்ற மே மாதத்தில், 22.40 லட்சம் கிலோ அதிகரித்து, 3.96 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, ஒட்டு மொத்த அளவில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, இலங்கை மற்றும் மாலவி நாடுகளில், கறுப்பு தேயிலை உற்பத்தி, தலா 9 லட்சம் கிலோ உயர்ந்து, முறையே, 3.36 கோடி கிலோ மற்றும் 47 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.அதேசமயம், வங்கதேசத்தில் கறுப்பு @தயிலை உற்பத்தி, 3 லட்சம் கிலோ குறைந்து, 52 லட்சம் கிலோவாக சரிவடைந்துள்ளது. மேலும், இந்தியாவிலும் இதன் உற்பத்தி, 22.40 லட்சம் கிலோ குறைந்து, 10.12 கோடி கிலோவாக உள்ளது.
நடப்பாண்டில், மே மாதம் வரையிலான ஐந்து மாத காலத்தில், இந்தியாவின் கறுப்பு தேயிலை உற்பத்தி, 25.55 கோடி கிலோவை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 68.20 லட்சம் கிலோ அதிகமாகும்.இதே காலத்தில், கென்யாவில் இதன் உற்பத்தி, 6.71 கோடி கிலோ உயர்ந்து, 19.51 கோடி கிலோவை எட்டியுள்ளது. மேலும், இலங்கையில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 1.11 கோடி கிலோ அதிகரித்து, 14.71 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டு உள்ளது.அதேசமயம், மாலவி நாட்டில், இதன் உற்பத்தி, 24.30 லட்சம் கிலோ சரிவடைந்து, 2.79 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேலும், வங்க@தசத்திலும், கறுப்பு தேயிலை உற்பத்தி, 4.40 லட்சம் கிலோசரிவடைந்து, 82.90 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|