பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
01:55
அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதால், இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிக அளவில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கத் துவங்கியுள்ளது.இதனால், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 15-20 சதவீதம் உயர்ந்து, 3,700 - 4,000 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 3,200 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 1,500 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு, 1,700 கோடி டாலராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, சுனில் கந்தல்வால் கூறியதாவது:அண்மைக்காலமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டுள்ளது.
அதே சமயம், டாலருக்கு எதிரான சீனாவின் யுவான் கரன்சி வலுவடைந்துள்ளது. இதனால், சர்வதேசசந்தையில் இந்திய ஜவுளிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.இந்நிலையில், இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி விசாரணைகள் குவியத் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இந்திய ஜவுளிகளுக்கு பெருகி வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, வரும் 2014-15ம் நிதியாண்டிற்கான, ஜவுளி ஏற்றுமதி இலக்கை, மத்திய அரசு, 5,000 @காடி டாலராக நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|