பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
10:02
மும்பை : வாரத்தின் முதல்நாளிலேயே பங்குவர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்திய பங்குசந்தைகள். சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற-இறக்கம், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை அதிகளவில் விற்க தொடங்கியுள்ளது மற்றும் மீண்டும் இமாலய சரிவை சந்தித்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று (ஜூலை 8ம் தேதி) சரிவுடன் துவங்கி இருக்கின்றன.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 262.61 புள்ளிகள் சரிந்து 19,233.21 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 80.90 புள்ளிகள் சரிந்து 5,787.00 எனும் அளவிலும் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.98 சதவீதம் சரிந்தும், ஜப்பானின், நிக்கி 1.27 சதவீதம் உயர்வுடனும் தொடங்கி இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|