பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
12:11
புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளித்து வரும் மானியம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலர் மதிப்பில், பணத்தைச் செலுத்தும் போது, நிதிச் சுமை ஏற்படுகிறது.சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை, 15 நாட்களுக்கு ஒருமுறை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு, மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், விலை உயர்வை அரசு கட்டுக்குள் வைத்துள்ளது.சமீப நாட்களாக மானிய சுமை அதிகரித்து வருவதால், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு மானிய அளவை குறைத்து, விலையை சற்றே உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மாதம் வரை, டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானியம், 80 ஆயிரம் கோடி ரூபாய். தற்போது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், மானியத்தின் அளவு, 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|