பதிவு செய்த நாள்
14 ஜூலை2013
01:30
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 448 கோடி டாலர் (25,536 கோடி ரூபாய்)சரிவடைந்து, 28,017 கோடி டாலராக (15.97 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 320 கோடி டாலர் (18,240 கோடி ரூபாய்) குறைந்து, 28,465 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, டாலர்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்று வாரங்களாக,சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு,318 கோடி டாலர் குறைந்து, 25,210 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது தவிர, கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும்,128 கோடி டாலர்சரிவடைந்து,2,155 கோடி டாலராக குறைந்துள்ளது. மேலும், கணக்கீட்டு வாரத்தில்,எஸ்.டீ.ஆர்., மதிப்பு,1.46 கோடி டாலர்சரிவடைந்து, 432 கோடி டாலராகவும்,சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 74 லட்சம் டாலர் குறைந்து, 218 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின், புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|