பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
09:37
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.12 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.37புள்ளிகள் சரிந்து 19926.10 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17.80 புள்ளிகள் சரிந்து 5991.20 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின், பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது. அதேசமயம், ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருந்து, மின்சாரம், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளை சேர்ந்த, நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், ரியல்எஸ்டேட், பொதுத் துறை நிறுவனங்கள், நுகர்பொருள்கள் ஆகிய துறைகளை சேர்ந்த,நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|