பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
09:57
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.55 ரூபாய் நேற்று உயர்ந்தது. சென்னையில், இந்த விலை உயர்வு, 1.95 ரூபாயாக இருக்கும். பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, பெட்ரோல் விலையை உயர்த்தி வருகின்றன. ஜூன் முதல் தேதி, லிட்டருக்கு, 75 காசுகளும், 16ம் தேதி, 2 ரூபாயும், 29ம் தேதி, 1.82 ரூபாயும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, 44 நாட்களில், நான்காவது முறையாக, நேற்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.55 ரூபாய் உயர்த்தப்பட்டது. விற்பனை வரி மற்றும், "வாட்' வரிகள் சேர்த்து, சென்னையில், இந்த விலை உயர்வு, 1.95 ரூபாயாக இருக்கும். இருப்பினும், டீசல் விலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|