பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
10:04
புதுடில்லி : நம்நாட்டில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களில், கோல்கட்டா முதலிடம் பிடித்துள்ளது. செலவு குறைவான நகரமாக, ஆமதாபாத் உள்ளது. பெருநகரங்களில் உள்ள நான்கு நட்சத்திர ஓட்டலில், இரண்டு பேர் தங்கினால், அவர்கள் தங்கவும், சாப்பிடவும், காபி, டீ போன்றவை குடிக்க ஆகும் செலவு எவ்வளவு என்பது தொடர்பாக, சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், கோல்கட்டாவில், நட்சத்திர ஓட்டலில் இருவர் தங்க, ஒரு நாள் வாடகை, 10 ஆயிரத்து 115 ரூபாய். குஜராத்தின் ஆமதாபாத் நகரில், இது, 6,406 ரூபாயாக உள்ளது. மும்பையில், 10 ஆயிரத்து 74 ரூபாயாகவும், டில்லியில், 9,728 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில், கடந்த ஆண்டில், 12 ஆயிரத்து 530 ரூபாய் என, இருந்தது. தற்போது, 35 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 8,122 ரூபாயாகி உள்ளது. இதில், நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நகரமாக, ஆமதாபாத் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், ஒரு நாள் தங்கும் கட்டணம், 17 சதவீதம் வரை குறைந்துள்ளது. இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|