பதிவு செய்த நாள்
16 ஜூலை2013
09:33
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 16ம் தேதி) சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.15 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 306.24 புள்ளிகள் குறைந்து 19728.24 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103.05 புள்ளிகள் குறைந்து 5927.75 புள்ளிகளோடு காணப் பட்டது. வர்த்தக வங்கிகளுக்கு கடன் விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதன் எதிரொலியாக வங்கி தொடர்பான பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்ததால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கின்றன. வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்குச்சந்தை சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது. அதேசமயம், ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது.நேற்று வெளியான, ஜூன் மாத பணவீக்க புள்ளி விவரம், சந்தையின் எதிர்பார்ப்பிற்கேற்ப இருந்ததால், சந்தை சூடு பிடித்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|