முட்டை விலை நிர்ணயம்முட்டை விலை நிர்ணயம் ... ஆப்பிள் தரும் புதுமை ஆப்பிள் தரும் புதுமை ...
நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.5 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
12:13

திருப்பூர்: நூல் விலை நேற்று மீண்டும் கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்தது. ஒரே மாதத்தில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன. அதிக ஏற்றுமதியால், நடப்பாண்டு பருத்தி சீசன் துவங்கியது முதல், பஞ்சு விலை உயர்ந்து காணப்பட்டது. மின்வெட்டு, டீசல் விலைகளும் அதிகரித்ததால், தமிழக நூற்பாலைகள், கடந்த பிப்ரவரியில், நூல் விலையை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்த்தின. மின்வெட்டு நேரம் குறைவு, ஏற்றுமதி வாய்ப்பு இழப்பு ஆகிய காரணங்களால், கடந்த ஜூன் 1ல், கிலோவுக்கு ஏழு ரூபாய் குறைக்கப்பட்டது. பருத்தி சீசன் நிறைவடைந்துள்ளதால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கேண்டி 46,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வால், ஏற்றுமதி செய்யும் நூலுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி, பெரும்பாலான நூற்பாலைகள் நூல் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டுவதால், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரத்துவங்கியுள்ளது. கடந்த 1ம் தேதி கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், சில திருப்பூர் நூற்பாலைகள், நூல் விலையை நேற்று முதல் மீண்டும் கிலோவுக்கு 5 ரூபாய் அதிகரித்துள்ளன.

கோம்ப்டு (வி.எல்., ரகம்): 204.48 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் நூல், 209.73; 212.94 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 218.19; 224.59 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 229.84; 239.40 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் 244.65; 246.82 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 252.07 ரூபாய். கார்டடு (ஜி.எல்., ரகம்): 19.75 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 196; 199.20 ரூபாயாக இருந்த 25ம் நம்பர் 204.05; 211.90 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 217.15; 225.66 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் 230.91; 233.07 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 238.32 ரூபாய். சூப்பர் கோம்ப்டு (ஆர்.எல்., ரகம்): 210.83 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் 216.08; 219.31 ரூபாயாக இருந்த 25ம் நம்பர் 224.94; 230.94 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 236.19; 245.77 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் 251.02; 253.16 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 258.41 ரூபாய், என, ரகத்துக்கு ஏற்ப, கிலோவுக்கு ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால், ஆடை உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பதோடு, கையில் உள்ள ஆர்டர்களை முடிப்பதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)