பதிவு செய்த நாள்
16 ஜூலை2013
15:04
அண்மையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு புதுமையான கம்ப்யூட்டர் துணை சாதனத்திற்கு காப்புரிமை கோரியுள்ளது. இது வர்த்தக ரீதியாக வெளியாகும் பட்சத்தில், கம்ப்யூட்டர் மற்றும் பயன்பாட்டில், இன்னும் ஒரு கூடுதல் வசதி கிடைக்கும். இந்த புதிய வடிவமைப்பில், இரு வேறு வகையான துணை சாதனங்கள், ஒரே போர்ட்டில் இணைந்து செயல்பட முடியும். ''Combined Input Port'' என இதனை ஆப்பிள் அழைக்கிறது. இரண்டு வகையான கனெக்டர்கள் கொண்டுள்ள, இரு வகையான போர்ட்களை ஒரே இடத்தில் அமைப்பது சிரமம். இதில் வெற்றி கண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். யு.எஸ்.பி. சாதனம் ஒன்றையும், மெமரி கார்டினையும் இணைக்கும் வகையில் ஒரே போர்ட்டினை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. தற்போதைக்கு இந்த இருவகை சாதன இணைப்பு என்றாலும், தொடர்ந்து வெவ்வேறு இணைவிக்கும் இடங்கள், ஒன்றாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் நோட்புக் கம்ப்யூட்டர்கள் இன்னும் சிறிதாகவும், தடிமன் குறைவாகவும் அமையலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|