பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
00:27
திருப்பூர்:பருத்தி நூலிழை விலை, மீண்டும் கிலோவுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்தது. ஒரே மாதத்தில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து உள்ளதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நூற்பாலைகள்:தமிழகத்தில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன. அதிக ஏற்றுமதியால், நடப்பாண்டு பருத்தி சீசன் துவங்கியது முதல், அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. மின்வெட்டு, டீசல் விலை அதிகரிப்பு போன்றவற்றால், தமிழக நூற்பாலைகள், கடந்த பிப்ரவரியில், நூலிழை விலையை, கிலோவுக்கு, 15 ரூபாய் வரை உயர்த்தின.
பின்னர், மின்வெட்டும், ஏற்றுமதி வாய்ப்பும் குறைந்ததால், கடந்த ஜூன் 1ல், கிலோவுக்கு ஏழு ரூபாய் குறைந்தது.இந்நிலையில், பருத்தி பருவம்முடிந்துள்ளதை அடுத்து, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு கேண்டி பருத்தி விலை, 46 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் மதிப்பு உயர்வால், ஏற்றுமதி செய்யும் நூலிழைக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெரும்பாலான நூற்பாலைகள், நூலிழை ஏற்றுமதியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
உயர்வு:இதனால், உள்நாட்டில் நூலிழை விலை உயரத் துவங்கிஉள்ளது. நடப்பு ஜூலை 1ம் தேதி, நூலிழை விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், சில நூற்பாலைகள், நேற்றுமேலும் ஐந்து ரூபாய் உயர்த்தியுள்ளன.
கோம்ப்டு (வி.எல்., ரகம்): 204.48 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் நூலிழை விலை, 209.73 ரூபாயாக உயர்ந்துள்ளது; 212.94 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 218.19 ரூபாயாகவும்; 224.59 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 229.84 ரூபாயாகவும்; 239.40 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் 244.65 ரூபாயாகவும்; 246.82 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 252.07 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
கார்டடு (ஜி.எல்., ரகம்): 190.75 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 196 ரூபாயாகவும்; 199.20 ரூபாயாக இருந்த 25ம் நம்பர் 204.05 ரூபாயாகவும்; 211.90 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 217.15 ரூபாயாகவும்; 225.66 ரூபாயாக இருந்த 34ம் நம்பர் 230.91 ரூபாயாகவும்; 233.07 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 238.32 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
செலவினம்:சூப்பர் கோம்ப்டு (ஆர்.எல்., ரகம்): 210.83 ரூபாயாக இருந்த 20ம் நம்பர் 216.08 ரூபாயாகவும்; 219.31 ரூபாயாக இருந்த 25ம் நம்பர் 224.94 ரூபாயாகவும்; 230.94 ரூபாயாக இருந்த 30ம் நம்பர் 236.19 ரூபாயாகவும்; 245.77 ரூபாயாகஇருந்த 34ம் நம்பர் 251.02 ரூபாயாகவும்; 253.16 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் 258.41 ரூபாயாகவும், விலை உயர்த்தப் பட்டுள்ளன.
நூலிழை விலை உயர்வால், ஆடை உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பதோடு, கையில் உள்ள ஆர்டர்களை முடிப்பதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஜவுளித் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|