காய்கறிகள் விலை குறையும்: சரத் பவார்காய்கறிகள் விலை குறையும்: சரத் பவார் ... தங்கம் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது: ப.சிதம்பரம் தங்கம் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது: ப.சிதம்பரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியா - ஆப்ரிக்கா வர்த்தகம்10 ஆயிரம்கோடி டாலர் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
00:29

புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டிற்குள், இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, 10 ஆயிரம்கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ள நிலையிலும், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதத்தில், 9.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 422கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும், இதன் ஏற்றுமதி, சென்றமே மாதத்திலும், 3.15 சதவீதம் குறைந்து உள்ளது.இதற்கு, ஐரோப்பா மற்றும்மேற்கத்திய நாடுகளின், பொருளாதார சுணக்க நிலையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, ஆப்ரிக்க நாடுகளை இலக்காக கொண்டு செயல்படுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, வர்த்தகம் அமைச்சகத்தின் கூடுதல் செயலர் டீ.எஸ்.தேசி கூறியதாவது: இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கிடையில், அதிகளவில் முதலீடு மற்றும் வர்த்தகம் மேற்கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் வெகுவாக உள்ளன. இதனை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 2008ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 3,400கோடி டாலர் அளவிற்கே இருந்தது. இது, சென்ற 2012ம் ஆண்டில், 6,500கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வரும், 2015 ஆண்டிற்குள், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை, 10 ஆயிரம்கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளவிலான மந்த நிலையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச வர்த்தகத்தில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் வலுவான மற்றும் நிலையான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாறுதேசி கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)