பதிவு செய்த நாள்
17 ஜூலை2013
00:29
புதுடில்லி:வரும் 2015ம் ஆண்டிற்குள், இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, 10 ஆயிரம்கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ள நிலையிலும், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதத்தில், 9.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 422கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும், இதன் ஏற்றுமதி, சென்றமே மாதத்திலும், 3.15 சதவீதம் குறைந்து உள்ளது.இதற்கு, ஐரோப்பா மற்றும்மேற்கத்திய நாடுகளின், பொருளாதார சுணக்க நிலையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, ஆப்ரிக்க நாடுகளை இலக்காக கொண்டு செயல்படுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, வர்த்தகம் அமைச்சகத்தின் கூடுதல் செயலர் டீ.எஸ்.தேசி கூறியதாவது: இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கிடையில், அதிகளவில் முதலீடு மற்றும் வர்த்தகம் மேற்கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் வெகுவாக உள்ளன. இதனை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 2008ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 3,400கோடி டாலர் அளவிற்கே இருந்தது. இது, சென்ற 2012ம் ஆண்டில், 6,500கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வரும், 2015 ஆண்டிற்குள், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை, 10 ஆயிரம்கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளவிலான மந்த நிலையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச வர்த்தகத்தில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் வலுவான மற்றும் நிலையான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வாறுதேசி கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|